மாயம் மாயம் மாயம் மாயம்
உலகம் மாயமே
விழித்துக்கொண்டால் விழித்துக்கொண்டால் எனக்கு லாபமே
திருவடியை பற்றி கொண்டால் துன்பம் எனக்கில்லை
ஆனால் செய்த பாவம் ஆசை என்னை இன்னும் விடவில்லை
கடமை கடமை என்று வாழ்ந்து தர்மம் தாங்கினால்
என்னை குழந்தை என்றே அன்னையவளும் பேணி மகிழுவாள்
அன்னை போற்றும் குழந்தையாக என்று மாறுவேன்?
அவள் நினைத்துருகும் தன்மையை நான் என்று பெறுவேன்
பொறுமை பொறுமை இனியும் எனக்கு துளியும் இல்லை
என் கீழ்மைகளை களைய நாளும் பார்ப்பதற்கில்லை