சக்தி அடா அவள் சக்தியடா
உலகை உய்விக்க பிறந்தாளடா!
தாயாய் தாரமாய் தன்னை மாற்றி
சேவை பயில வந்தாளாடா!
சுகஸ்வரூபினி அவளன்றோ
கலைமகள் அவள் தாய் அன்றோ!
அனைவரையும் முன்னேற விட்டு
அஸ்திவாரமாய் நிற்பாள் அடா!!
பெண்மையைக் கண்டால் கைக்கூப்பி
புண்ணியம் நீயும் ஈட்டிடடா,
உய்ய இதைப் போல் நல்ல மார்க்கம்
வேறு என்ன உரைப்பாரடா?
தியாகம் உடையவள் சக்தியடா,
தாய்மை உடையவள் சக்தியடா,
நீ வீரம் பயில வேறிடம் உண்டு அவளை என்றும் வணங்கிடடா!!
No comments:
Post a Comment